மனுஷனாடா நீ! பிஞ்சு குழந்தை அது! 1 வயது குழந்தையை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை! கதவை உடைத்து தாய் கண்ட பேரதிர்ச்சி! அதிர்ச்சி சம்பவம்...
இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சமீபத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஜ்வாசன் பகுதியில் 1 வயது குழந்தை மீது நடந்த கொடூரம் சமூகத்தில் கடும் கண்டனத்தை கிளப்பியுள்ளது.
குழந்தையை தனது அறைக்கு அழைத்துச் சென்ற குற்றவாளி
அதிகாரிகள் தெரிவித்ததாவது, பிஜ்வாசன் பகுதியில் இன்று காலை 9 மணியளவில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. குழந்தையின் தாயின் தகவல்படி, அவர்களது வீட்டுக்கு அருகில் வாடகைக்கு இருந்த 32 வயது ஆண், குழந்தையை தனது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
தாய் கதவை உடைத்து கண்ட அதிர்ச்சி
சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகை கேட்டதும், தாய் அவசரமாக அந்த அறைக்குள் செல்ல முயன்றார். ஆனால், கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்ற போது, குழந்தை ஆடையின்றி, ரத்தத்தில் நனைந்த நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 6 வயது சிறுவன் பலாத்காரம்... 31 வயது நபருக்கு இரட்டை ஆயுள்.!! போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!
காவல்துறை நடவடிக்கை
உடனடியாக குடும்பத்தினர் கபாஷேரா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, குற்றவாளி சுதிரை கைது செய்தனர். இவர் உத்தரப் பிரதேசத்தின் பாக்பத் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்போது காவல்துறை விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த அருவருப்பான சம்பவம் சமூகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மீதான கவலைகளை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் 1ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை! வட மாநில தொழிலாளி கைது! பெற்றோர் கடும் போராட்டம்!