ஒருதலைக் காதல்! இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் அதிர்ச்சி பதிவு! 18 வயது வாலிபர் 1500 அடி பள்ளத்தில் இருந்து... 4 நாட்கள் போராட்டம்! பகீர் சம்பவம்..
நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு சோகமான சம்பவம், இளம் தலைமுறையினருக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. குன்னூர் அருகே மாணவர் ஒருவர் ஒருதலை காதல் தோல்வியால் உயிரிழந்தது அப்பகுதியை வியப்பிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
இளைஞரின் அடையாளம்
மேல்குன்னூரை சேர்ந்த அபு முகமது சாஜிதனின் மகன் முகமது அனாஸ் (வயது 18), குன்னூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவராக படித்து வந்தார். அவர் தனது கல்லூரியில் படித்த மாணவியிடம் ஒருதலைபட்சமாக காதல் கொண்டிருந்தார். ஆனால், மாணவி அதை ஏற்காததால் மனமுடைந்ததாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் பதிவு
மனவேதனையில் சிக்கிய அனாஸ், கடந்த 17-ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “உயிர் வாழ விருப்பமில்லை, பெற்றோர்களையும், பூனைக்குட்டியையும் கவனிக்கவும்” என்று பதிவிட்டார். இதைக் கண்ட நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இளம்பெண்ணுக்கு காலை தூங்கி எழுந்ததும் உடம்பில் ஒரே அரிப்பு! சில நிமிடங்களில் உடல் முழுவதும் வீக்கம்! அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்...
தேடுதல் நடவடிக்கைகள்
மேல்குன்னூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து டைகர் ஹில் தேயிலை எஸ்டேட் பகுதியில் தேடுதல் மேற்கொண்டனர். அங்கு அனாஸ் பயன்படுத்திய பை மற்றும் மதுபாட்டில் கண்டெடுக்கப்பட்டது. அவர் மதுபோதையில் 1,500 அடி பள்ளத்தில் குதித்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இரவு நேரமாகியதால் தேடுதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
உடல் மீட்பு
தொடர்ந்து மூன்று நாட்கள் வெயிலும் மழையும் மாறி மாறி பெய்தபோதிலும் மீட்புப் படையினர் விடாமுயற்சியுடன் தேடினர். இறுதியில், நான்காவது நாளில் அனாஸின் உடல் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சோகச் சம்பவம் குன்னூர் மக்களிடையே பெரும் துயரத்தையும் இளைய தலைமுறையில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. காதல் தோல்வி காரணமாக உயிரை மாய்க்கும் நிலை, சமூகத்தில் ஆழ்ந்த சிந்தனையை தூண்டியுள்ளது.
இதையும் படிங்க: நீ எனக்கு இல்லனா யாருக்கும் இல்ல! காதலன் நம்பரை பிளாக் செய்த காதலி! அடுத்து காதலன் செய்த பயங்கரம்! இறுதியில் அதே இரவு..... அதிர்ச்சி சம்பவம்!