திடீரென பற்றி எரிந்த கார்., கருகிப்போன நபர்!! போலீசார் விசாரணை!!

திடீரென பற்றி எரிந்த கார்., கருகிப்போன நபர்!! போலீசார் விசாரணை!!



car burnt in kerala

சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்துள்ளது. அதிலிருந்து ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் கேரளாவில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாலை 4.30 மணி அளவில் ஆலப்புழா குட்டநாட்டில் தாயங்கரி போட் ஜெட்டி சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்துள்ளது.

பின்னர் உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்புத்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். பின்பு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து உள்ளனர். பின்னர் ஓட்டுநர் இருக்கையில் ஆண் சடலம் எரிந்த நிலையில் இருந்துள்ளது.

உடல் முழுவதும் எரிந்ததால் அடையாளம் காண முடியாத நிலையில் இருந்த அந்த கார் ஜேம்ஸ் குட்டி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.