ஓட்டு கேட்க போன இடத்தில் கக்கா கழுவி போஸ் கொடுத்த வேட்பாளர், வைரலாகும் வீடியோவால் பங்கமாக வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!

ஓட்டு கேட்க போன இடத்தில் கக்கா கழுவி போஸ் கொடுத்த வேட்பாளர், வைரலாகும் வீடியோவால் பங்கமாக வச்சு செய்யும் நெட்டிசன்கள்.!


candidate-wash-toilet-to-baby-for-buy-vote

தெலுங்கானாவில் வாக்கு சேகரிக்க சென்ற இடத்தில் வேட்பாளர் ஒருவர் குழந்தைக்கு கக்கா கழுவிவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தெலுங்கானாவில் தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் ஓட்டுகளை பெற வேட்பாளர்கள் ஷேவிங் செய்து விடுவது, குளிக்க வைப்பது, சமைத்து தருவது போன்ற பல்வேறு திட்டங்களை கையாண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் தான் வாக்கு சேகரிக்க சென்றபோது அங்கு குழந்தை வீட்டின் முன்பு மலம் கழித்துக்கொண்டிருந்தது.
 
இதனைப்பார்த்த அமைச்சர் குழந்தை அருகே சென்று குழந்தைக்கு கக்கா கழுவிவிட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அப்போது அவருக்கு அருகே கட்சியினர் ஜெய் தெலுங்கானா என முழக்கமிட்டனர்.

இது இணையத்தில் வெளியாகி வைரலாக வந்த நிலையில் இதனை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.