குழந்தையை நோக்கி பாய்ந்த பிட்புல் நாய்.. உயிருக்கு ஆபத்தான நிலையில் 6 மாத பிஞ்சு.. நெஞ்சை பதபதைக்கும் வீடியோ!
ஹரியானா மாநிலம் சோனிபட்டில் 6 மாதக் குழந்தையை பிட்புல் நாய் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது.
குழந்தை வீட்டின் அருகே இருந்தபோது பிட்புல் நாய் திடீரென தாக்கியதாக கூறப்படுகிறது. நாய் குழந்தையை கடுமையாக தாக்கிய நிலையில், அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
குறிப்பாக, நாய் தாக்கிக் கொண்டிருந்தபோது அதன் உரிமையாளர் அருகிலேயே இருந்ததாகவும், உடனடியாக நாயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நாய் வளர்ப்பில் உரிமையாளர்களின் பொறுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
Pitbull pet attacks 6 month old kid in Sonipat Haryana.
Check how relaxed is the Pitbull owner, sorry parent, while the dog was brutally attacking the kid.
Kid is severely injured, in hospital.
But Dog Lovers will still defend it. Justify it by saying dog must be hungry, something must have triggered it.. Blah blah blah.
— Ankur Singh (@AnkurSingh) September 17, 2026
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆபத்தான நாய் இனங்களை வளர்ப்பதில் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.
இதனிடையே, குழந்தையின் உடல்நிலை மற்றும் சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாய் வளர்ப்பவர்கள் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் இந்த சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.