டெல்லியில் நடந்த கோர சம்பவத்தின் இன்னொரு சிசிடிவி பதிவுகள்.. மற்றொரு பெண் எங்கே..!
டெல்லியில் நடந்த கோர சம்பவத்தின் இன்னொரு சிசிடிவி பதிவுகள்.. மற்றொரு பெண் எங்கே..!
டெல்லி மாநகர பகுதியில் 20 வயது பெண் ஒருவர் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த 5 இளைஞர்கள் அவரை இடித்து தள்ளியுள்ளனர். பின்னர் அந்த பெண் காருக்கு அடியில் சிக்கியுள்ளார்.
மேலும் சில கிலோமீட்டர் தூரம் வரையில் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டு விபத்தில் உயிரிழந்தார். இந்த கோர விபத்தை ஏற்படுத்திய கார் பதிவு எண் கொண்டு காரில் பயணம் செய்த 5 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
விபத்தில் சிக்கிய 5 பேருக்கும் விரைவில் தண்டனை வழங்க வேண்டும் என எல்லா நாட்டில் பலரது குரல் வலுத்து வருகிறது. ஒரு பெண் மட்டுமே விபத்திற்குள்ளாகியுள்ளார் என செய்திகள் வெளியானது.
ஆனால், இந்த நிலையில் 20 வயது பெண்ணுடன் மற்றொரு பெண் இருப்பது போன்ற மற்றொரு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த பெண்ணின் கால்கள் கார் சக்கரத்தில் சிக்கியதால் அவர் இழுத்துச் செல்லப்பட்டார். மேலும் இரண்டாவது பெண் இறந்த பெண்ணின் தோழி என்றும், கார் மோதியதில் அவர் சிறு காயங்களுடன் தப்பினார் என்றும் காவல் துறை நம்புகிறது.