விமான விபத்தில் யாரையும் காப்பாற்ற முடியாமல் போனதற்கு என்ன காரணம் தெரியுமா? டாக்டரின் கனவு கருகி ஒட்டு மொத்த குடும்பமும் பலி..!

விமான விபத்தில் கருகிய கனவு குடும்பம்: அகமதாபாத் ஏர் இந்தியா விபத்தில் 241 பேர் பலி
அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு லண்டனை நோக்கிய ஏர் இந்தியா விமானம் (AI171), புறப்பட்ட 5 நிமிடங்களுக்குள் கீழே விழுந்து நொறுங்கிய பெரும் விபத்தில் முடிந்தது. இதில் பயணித்த 230 பயணிகளும் 11 பணியாளர்களும் உட்பட மொத்தம் 241 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உள்துறை அமைச்சரின் நேரடி ஆய்வு
விபத்து ஏற்பட்ட இடத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“விமானம் 1,25,000 லிட்டர் எரிபொருளுடன் புறப்பட்டு வந்தது. கீழே விழுந்ததும் முழு விமானமும் தீப்பற்றி எரிந்து விட்டது. அதிக வெப்பநிலை காரணமாக யாரையும் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.”
இதையும் படிங்க: Video : புறப்பட்ட 5 நிமிடத்தில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த விமானம்! பயணிகள் நிலை என்ன! வெளியான வீடியோ காட்சி...
கருப்பு பெட்டி மீட்பு மற்றும் விசாரணை
AI171 விமானத்தின் கருப்பு பெட்டி (Black Box) மீட்கப்பட்டு, அதன் மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களை கண்டறிய தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் உள்ள பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரணமடைந்தோரின் உடல்களின் டி.என்.ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பின்னர் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.
மருத்துவர் தம்பதியின் சோகம்கரையான முடிவு
இந்த விபத்தில் பலியான பலர் ஒரு புதிய வாழ்க்கையை நோக்கிய பயணத்தில் இருந்தனர். அந்தவகையில், லண்டனில் வாழ தங்கள் மூன்று குழந்தைகளுடன் பயணம் செய்த மருத்துவர் தம்பதியின் மரணம் மிகவும் பரிதாபகரமான ஒன்றாக அமைந்துள்ளது.
உதய்பூரில் பணியாற்றிய மருத்துவர் கோமி வியாஸ், அவரது கணவர் டாக்டர் பிரதீக் ஜோஷி, மற்றும் குழந்தைகள் நகுல் (வயது 5), பிரத்யுத் (வயது 5) மற்றும் மிராயா (வயது 8) ஆகியோர், இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
விபத்துக்கு முன்பு விமானத்தில் எடுத்த செல்ஃபி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில், குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் பயணிக்கத் தயாராக இருக்கிறார்கள். குழந்தைகள் கேமராவைப் பார்த்து சிரிக்க, தாய் தந்தை அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்துள்ளனர். அந்தக் கணம் அவர்களுக்குப் கனவுகளின் தொடக்கமாக இருந்தது. ஆனால், அது சோகத்தின் முடிவாக மாறியது. ஒரே குடும்பத்தின் அழிவானது பலரின் மனங்களை உலுக்கியுள்ளது.
True and sad
— Harman Singh Kapoor (@kingkapoor72) June 12, 2025
A dream perished
Pratik Joshi, a software professional, had lived in London for six years, dreaming of bringing his wife and three children from India. After years of waiting for clearances, his dream was nearing reality. Two days ago, his wife, Dr. Komi Vyas, a… pic.twitter.com/ncjspH0sZw
இதையும் படிங்க: அகமதாபாத் விமான விபத்தில் முன்னாள் முதல்வர், கணவரை முதல்முறை பார்க்க சென்ற புதுமணப் பெண் பலியாகினர்! நெஞ்சை உலுக்கும் துயர சம்பவம்...