திருமணமான பெண்ணை வேறு மாநிலத்திற்கு கடத்தி சென்று விற்ற அதிர்ச்சி சம்பவம்....!

திருமணமான பெண்ணை வேறு மாநிலத்திற்கு கடத்தி சென்று விற்ற அதிர்ச்சி சம்பவம்....!



A married woman who met through Insta... was kidnapped and married to another person...

திருமணமான பெண்ணை வேறு மாநிலத்திற்கு கடத்தி சென்று விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள பால்கர் மாவட்டத்தில் 23 வயது பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அந்த பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதனால் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பெண் கடத்தப்பட்டது தெரியவந்தது. 

மேலும் அந்த பெண்ணுக்கு சில மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்து கொண்டு பழகத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த பெண் அவருடைய குடும்ப சூழ்நிலையை அந்த நபரிடம் கூறியுள்ளார். 

அப்போது அவர் தனக்கு பெரிய அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருக்கிறது என்று சொல்லி, காவல் துறையில் வேலை வாங்கி தருவதாக சொல்லி இருக்கிறார். அந்தப் பெண்ணும் அதை நம்பியுள்ளார்.

இந்நிலையில் வேலை சம்பந்தமாக நேரில் சந்தித்து பேச வேண்டும் என சொல்லி அந்த பெண்ணை வரவழைத்துள்ளார். அப்போது அவரின் கூட்டாளிகள் நான்கு பேருடன் சேர்ந்து ராஜஸ்தானுக்கு அந்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளனர்.

அதன் பிறகு அங்கிருந்த ஒருவருக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு அந்தப் பெண்ணை விற்றுள்ளனர். மேலும் அவருடன் அந்த பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில் அந்தப் பெண்ணின் இருப்பிடம் தெரிந்து மீட்கப்பட்டார்.  முக்கிய குற்றவாளி பிடிபட்ட நிலையில், அவரின் கூட்டாளிகள் நான்கு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருமணமான பெண்ணை வேறு மாநிலத்திற்கு கடத்தி சென்று வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.