கீர்த்தி சுரேஷின் நாய் என்ன காரியம் செய்து பாருங்க ! அவரே வெளியிட்ட காணொளி இணையத்தில் வைரல்...
70 ஆயிரம் ரூபாய்க்கு கல்யாணம்... கொலை செய்து காட்டில் வீச்சு... காவல்துறை விசாரணையில் வெளியான பகீர் உண்மை.!

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் மனைவியை கொன்று காட்டுப்பகுதியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தலைநகர் டெல்லியின் ஃபதேபூர் பகுதியில் பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணையை மேற்கொண்டனர். காவல்துறை விசாரணையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொலை நடந்த இடத்தில் இருந்த ஆட்டோ ஒன்றின் நம்பரை வைத்து அதன் டிரைவர் அருண் என்பவரை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தரம்வீர் என்ற நபர் ஆதரவற்ற பெண்ணான ஸ்வீட்டியை 70 ஆயிரம் ரூபாய் கொடுத்து திருமணம் செய்து இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு ஸ்வீட்டி அடிக்கடி வீட்டிலிருந்து வெளியே சென்று வந்ததால் அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அவரை ஹரியானா எல்லையில் உள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டு சடலத்தை காட்டில் வீசி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவரை கைது செய்த காவல்துறையினர் அந்தப் பெண்ணின் கணவர் தரம்வீர் மற்றும் சத்யவான் ஆகியோரையும் கைது செய்தனர்.