71 உயிரை காவு வாங்கிய இயற்கை., வரலாறு காணாத அழிவு! தவிக்கும் ஹிமாச்சலம்!!

71 உயிரை காவு வாங்கிய இயற்கை., வரலாறு காணாத அழிவு! தவிக்கும் ஹிமாச்சலம்!!



71 members death due to heavy rain and landslide in Himachal

ஞாயிற்றுக்கிழமை முதல் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் சிம்லாவின் கிருஷ்ணா நகர்,  ஃபாக்லி போன்ற பகுதிகளில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலச்சரிவில் பலரும் உயிரிழந்துள்ளனர். இதனால் கனமழை பாதிப்பு, நிலச்சரிவு ஆகியவற்றையால் இதுவரை 71 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 13 பேர் என்ன ஆனார்கள் என்று தெரியாமல் காணாமல் போய் உள்ளனர்.

இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தேடுதல் வேட்டையில் இதுவரை 50 சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மற்றவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் மலைப்பகுதியில் வாசித்து வரும் குடும்பங்கள் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தில் இருக்கும் தங்களது இருப்பிடத்தை காலி செய்த பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளன.