போலி மதுபானம் குடித்து 41 பேர் பலி! அதிர்ச்சி சம்பவம்!

போலி மதுபானம் குடித்து 41 பேர் பலி! அதிர்ச்சி சம்பவம்!



41 people died for Fake liquor

பஞ்சாப் மாநிலத்தில் போலி மதுபானம் குடித்து 41  போ் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸின் ஊரக பகுதிகளில் பலர் போலி மது அருந்தியதால் உயிரிழந்துள்ளனர். போலி மதுபான பயன்பாடு பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளதால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ், படாலா, டார்ன் போன்ற பகுதிகளை சேர்ந்த பலர் போலி மதுபானம் அருந்தி உயிரிழந்துள்ளனர். சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனையடுத்து போலி மதுபானம் விற்பனை செய்தது தொடா்பாக முச்சல் கிராமத்தைச் சோ்ந்த ஒரு நபரை போலீசார் கைது செய்தனர்.

பஞ்சாப் மாநிலத்தில் போலி மதுபானம் அருந்தியதால் இதுவரை 41 பேர் பலியாகி உள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டார்.