13 வயது சிறுமி... 6 பேர்... 28 நாட்கள்... நாட்டையே உலுக்கிய கூட்டு பாலியல் வன்புணர்வு.!



13-year-old-girl-sexually-assaulted-by-6-peoples-for-28

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி  கடத்தப்பட்டு 28 நாட்கள் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம்  நாடெங்கிலும் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது .

பீகார் மாநிலம் முசாபர்பூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த ஜூலை  ஒன்பதாம் தேதி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக அந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி அந்த பெண்ணிற்கு ஒரு அழைப்பு வந்திருக்கிறது. அதன்படி சரையா சவுக்  என்ற இடத்தில் சென்று மகளை அழைத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ளனர். அங்கு அந்த சிறுமியின் தாயார் சென்று பார்த்த போது சிறுமி மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் .

Indiaஇது தொடர்பாக சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். தனது மகளை ஆறு பேர் கொண்ட கும்பல்  28 நாட்கள் கடத்திச் சென்று தொடர் கூட்டு பாலியல் வன்புணர்வில்  ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தற்போது தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் .

Indiaகாவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் சிறுமிக்கு பேஸ்புக் சமூக வலைதளம் மூலம் அறிமுகமான நபர்கள்  சிறுமியின் விபரங்களை சேகரித்து  அவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தது தெரிய வந்திருக்கிறது. மேலும் தான் புகார் கொடுத்த போதே காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் தனது மகளுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காது என  சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.