தண்ணீர் கேட்பது போல் நடித்து 12 வயது சிறுமி பலாத்காரம்! கேரளாவில் பரபரப்பு

தண்ணீர் கேட்பது போல் நடித்து 12 வயது சிறுமி பலாத்காரம்! கேரளாவில் பரபரப்பு



12 year girl raped in kerala

சமீப காலங்களில் பலாத்கார சம்பங்கள் அதிகமாக அரங்கேறி வருகின்றன. குறிப்பாக இதில் சிறுமிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

தெலங்கானாவில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை என்கவுண்டரில் கொன்ற பிறகும் கூட இதைப் போன்ற ஆசாமிகளுக்கு பயம் ஏற்படவில்லை. 

கேரளாவின் கோட்டயம், கஞ்சிராபாலி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி அடையாளம் தெரியாத நபரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 

12 year girl raped

ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து தண்ணீர் கேட்பது போல் வீட்டிற்குள் புகுந்த அந்த நபர் 8 ஆம் வகுப்பு படிக்கும் அந்த 12 வயது சிறுமியை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளான். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.