சர்க்கரை நோயாளிகளுக்கு குட் நியூஸ்.. கிராம்பு நீரால் நடக்கும் மேஜிக்.!



KIRAMBU WATER FOR DIABETICS

தேசிய வியாதி

சர்க்கரை நோய் இந்தியாவின் தேசிய வியாதியாக கூறப்படுகிறது. அதிகப்படியான கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக் கொள்வதால் தற்போது இந்த சர்க்கரை நோய் பரம்பரை வியாதியாகும் அளவிற்கு நமது மக்களை கொண்டு சென்று விட்டுள்ளது.

உணவு பழக்கம்

ஆனால் இன்னமும் நம் மக்கள் உணவு பழக்கத்தை மாற்றிக் கொண்டார்களா என்றால் இல்லை. அவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் வருமான பிரச்சனை உள்ளிடவை தான் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சர்க்கரை வியாதியை ஆரம்ப கட்டத்தில் வீட்டிலேயே குறைக்கக்கூடிய சில வழிமுறைகளை இங்கு பார்க்கலாம். 

இதையும் படிங்க: நாக்கில் ஏற்படும் புற்றுநோய்: மக்களே உஷார்.. இந்த அறிகுறி இருக்கா? 

KIRAMBU WATER

கிராம்பு நீர் 

கிராம்பை கொண்டு சர்க்கரை அளவை குறைக்கலாம். கிராம்பில் நைஜீரிசின் என்ற சத்து இருக்கின்றது. இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை உறிஞ்சுகிறது. மேலும், கணையத்தில் இன்சுலின் சுரக்க வழிவகை செய்கிறது. கிராம்பு சாப்பிடுவதால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பதற்கு இந்த செயல்முறை தான் காரணம். 

ஓரிரு வாரங்களில் மாற்றம்

அன்றாடம் இரவு ஒரு டம்ளர் தண்ணீரில் 3 கிராம்பை போட்டு ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலை அந்த நீரை குடிக்கலாம். இதனால், சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கலாம். நீங்கள் பயன்படுத்தி பார்த்தால் ஓரிரு வாரங்களில் உடலில் மாற்றம் ஏற்படுவதை உணரலாம்.

இதையும் படிங்க: அந்த விசயத்துல 1 நிமிடத்திற்குள் முடிந்துவிடுகிறதா? முந்துகிறதா? அசத்தல் டிப்ஸ் உங்களுக்காக.!