தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!? 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இன்பசெய்தி.!!
சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் நடிகை யாஷிகாவின் ஓபன் டாக்..!

தற்போது பிரபலமாக விஜய் Tv யில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சியின் தான் பிக்பாஸ். இது முதல் சீசன் முடிந்து தற்போது இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்காசன் அவர்கள் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் மிகவும் இளம் வயது போட்டியாளர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். தற்போது வளரும் நடிகைகளில் இவரும் ஒருவர். இவர் சமீபத்தில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்னும் படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் மூலம் இவர் அதிகளவு ரசிகர்களை கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இன்னொரு போட்டியாளராக கலந்து கொண்டுள்ளவர் தான் நடிகர் மஹத். இவர்கள் இருவருக்கும் இடையே உள்ள நட்பு அனைத்தும் நாம் அறிந்ததாகும்.
இந்த சூழ்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் நடிகர் மஹத்தை காதலிப்பதாக கூறியது பல சர்ச்சைகளுக்கு காரணமாகி உள்ளது. ஆனால் இந்த நடிகர் மகத் ஏற்கனவே பிராச்சி என்ற ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக அதே நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் நடிகர் மகத்தை வறுத்தெடுத்து விட்டனர்.
நடிகை மும்தாஜ் இந்த நிகழ்ச்சியில் தன் தோழியின் காதல் கதையை பற்றி பேசியுள்ளார். அப்பொழுது அவரது தோழி சனா என்பவருக்கு திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகி இருந்ததாம்.
அந்த சூழ்நிலையில் அவரது நண்பர் சனாவுக்கும் மற்றொருவருக்கும் காதல் ஏற்பட்டதாம், என்ன முடிவெடுப்பது என்றே தெரியாமல் அவர் ஒரு பெரிய யோசனை ஒன்றை செய்து நடிகை மும்தாஜிடம் கேட்டாராம்.
அப்போது நடுவில் பேசிய யாஷிகா “Love is Uncontrollable, It can happen with one or many” என சத்தமாக கத்தினார். அதற்கு பின்பு நடிகை யாஷிகா காதல் என்பது யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியாது, மேலும் அது பலபேருடன் வரும் என யாஷிகா பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரவுகிறது.