சமூக அக்கறை கொண்ட மக்கள் சேவகர் விவேக் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கும் கேப்டன் விஜயகாந்த்.!

சமூக அக்கறை கொண்ட மக்கள் சேவகர் விவேக் குணமடைய இறைவனிடம் பிரார்த்திக்கும் கேப்டன் விஜயகாந்த்.!



vijayakanth-pray-for-vivek

நடிகர் விவேக்கிற்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். நடிகர் விவேக்கிற்கு 'எக்மோ' சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் விவேக், விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து விஜயகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “நகைச்சுவை நடிகர் விவேக், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன். திரைப்படங்களில் சிந்திக்க வைக்கும் சமூக அக்கறை கொண்ட பல கருத்துக்களை மக்கள் மனதில் பதிய வைப்பதிலும், சமூக சேவைகள் செய்வதிலும் என்றும் முதலிடத்தில் திகழும் நடிகர் விவேக், விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்." என குறிப்பிட்டுள்ளார்.