
Vadivelu enters into twitter
வைகைப் புயல் வடிவேலு இல்லாமல் இங்கு ஒரு நாளும் ஓடுவதில்லை. சமூகவலைத்தளங்களைத் திறந்தாலும் சரி, தொலைக்காட்சியிலும் சரி நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து இருக்கிறார் வடிவேலு என்றே சொல்லலாம்.
சமீபத்தில் உலக அளவில் ப்ரே பார் நேசமணி என்ற ஹேஷ்டாக் ட்ரண்டிங் ஆன போது கூட ட்ரண்டிங்னா என்ன என்று வெள்ளந்தியாக கேட்ட மனிதர் வடிவேலு. யாரை, எப்படி, எந்த விஷயத்திற்கு கலாய்க்க வேண்டுமானாலும் மீம்ஸ் கிரியேட்டர்கள் பயன்படுத்தும் ஒரே நபர் வடிவேலு தான்.
இத்தனை நாட்கள் மீம்ஸ்கள் மூலமே ரசிகர்களுக்கு காட்சி தந்த வைகைப்புயல் தற்போது நேரடியாகவே ட்விட்டரில் குதித்துவிட்டார். அவருடைய நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணக்க முதல்முறைய ட்விட்டரில் தனக்கென ஒரு அக்கவுண்டை திறந்துள்ளார்.
அதனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் விதமாக தானே ஒரு வீடியோ பதிவினையும் அவர் வெளியிட்டுள்ளார். ராஜா போல் வேடமனிந்த அந்த வீடியோவில், ரசிகர்களின் அன்பை ட்விட்டர் வாயிலாக பறிமாறவும் ரசிகர்களை அடிக்கடி இதன் வாயிலாக சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகள் கடந்தாலும் என்னை மறக்காமல் இருக்கம் தமிழ் மக்களுக்கு வணக்கம் 🙏
— Actor Vadivelu (@VadiveluOffl) March 20, 2020
என்னுடைய பழைய ட்விட்டர் தொலைந்து போய் விட்டது. அதனால் #ரஜினி ஐ போல் திரும்பி வந்துட்ட சொல்லு 🙏#PrayForNesamani ஆ அட பாவீங்களா !! சரி நன்றி ப்ரென்ட்ஸ் #விஜய் #சூர்யா. என்றும் #அஜித் ஐ மறக்க மாட்டேன் 🙏 pic.twitter.com/dSjWRr0kVs
Advertisement
Advertisement