அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
டேய் கொஞ்சம் அடக்கி வாசிடா! வைகை புயல் வடிவேலுவை திட்டிய சிவாஜி! எதற்கு தெரியுமா?
டேய் கொஞ்சம் அடக்கி வாசிடா! வைகை புயல் வடிவேலுவை திட்டிய சிவாஜி! எதற்கு தெரியுமா?
நடிகர் வடிவேலு அவர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மாபெரும் சிறந்த கலைஞர். இவரின் காமெடியை விரும்பாத மக்கள் யாரும் இல்லை என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு இவரின் நகைச்சுவையான நடிப்பு மக்கள் மனங்களில் இடம் பிடித்துள்ளது.
இன்னும் சில ரசிகர்களுக்கு தங்களது துன்பமான நேரத்தில் வடிவேலு காமெடியில் ஒன்றை பார்த்தாலும் முகத்தில் புன்னகை தோன்ற ஆரம்பமாகி விடும் அந்த அளவிற்கு நடிப்பால் உயரத்தை தொட்டவர் நடிகர் வடிவேலு.
இந்நிலையில் தற்போது இவரின் காமெடியை காண முடியாமல் இருப்பது கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற கமல்60 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் வடிவேலு.
அப்போது அந்நிகழ்ச்சியில் நடிகர் கமலுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் தேவர்மகன் படத்தில் நடிக்கும் போது நடிகர் சிவாஜி அவர்கள் இறந்ததும் கமல் என்னை அழ சென்னார்.
உடனே நான் கதறி அழுதேன். அப்போது படுத்திருந்த சிவாஜி எழுந்து தன்னை திட்டியதாக கூறினார். அதற்கு காரணம் கமல் தான் எனக்கு மகன். நீ என் மகன் இல்லை என கூறியுள்ளார் சிவாஜி. அதனால் தன்னை அடக்கி வாசிடா என்று அன்பாக தன்னை கடிந்து கொண்டதாக தனது அனுபவத்தை பகிர்ந்தார் வடிவேலு.