ரோஹினி எடுக்கபோகும் திடீர் முடிவால் பதறிய மனோஜ்! அடுத்து நடக்கபோவது என்ன- சிறகடிக்க ஆசை புரோமொ வீடியோ

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடில் சீதா மற்றும் அருண் இடையே ஏற்பட்ட பரபரப்பான தருணங்கள் ரசிகர்களை பரபரப்பாக்கியது. முத்துயை சந்தித்ததும், அருண் மிகுந்த கோபத்தில் கலங்குகிறார். கோவிலில் எந்தவிதமான உரையாடலும் இல்லாமல் நேராக சீதா வீட்டிற்கு செல்கிறார்.
சீதாவின் வீட்டில் பரபரப்பான சம்பவங்கள்
அங்கே சென்ற அருண், சீதாவின் அம்மாவிடம் நடந்தவற்றை சொல்கிறார். முத்து கூறியதை கேட்டவுடன் சீதா வீட்டிற்கு வந்தவுடன், அம்மா சீதாவை கடுமையாக அடிக்கிறார். தன் மகளின் வாழ்க்கையில் தவறுகள் நடக்கக்கூடாது என்பதே அவருடைய நோக்கம்.
மீனா சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார்
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, மீனா சமாதானமாக சீதாவை நம்பிக்கையுடன் பேசும்படி கூறுகிறாள். இது பார்வையாளர்களிடம் உணர்ச்சிபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இதையும் படிங்க: ரோஹினியின் வில்லதனத்தால் சிக்கப்போகும் விஜயா! சிறகடிக்க ஆசை புரோமொ வீடியோ...
நாளைய புரொமோவின் ஹைலைட்ஸ்
மனோஜ் மற்றும் ரோஹினி இடையேயான உரையாடல் நாளைய புரொமோவில் முக்கியமாக இடம் பெற்றுள்ளது. மனோஜின் நண்பர் கூறும் குடும்பக்கதை, மனோஜின் வாழ்க்கையை சிந்திக்க வைக்கிறது. இந்த உரையாடலுக்குப் பிறகு, ரோஹினி உணர்ச்சிவசப்படுகிறார்.
ரோஹினியின் அதிர்ச்சிகரமான முடிவுகள்
ரோஹினி மனோஜிடம், நீ எப்போதும் உன் அம்மாவுக்கே ஆதரவு தருவதைப்போல் இருந்தால், நான் என்ன முடிவு வேணுமானாலும் எடுக்க தயார் என்று கூற, மனோஜ் அதிர்ச்சி அடைகிறார். இதோ அந்த வீடியோ
இதையும் படிங்க: எத்துன வில்லத்தனம்....ஒரு பிரச்சனையில் இருந்து தப்பித்து பெரிய சிக்கலில் சிக்கும் ரோஹினி! சிறகடிக்க ஆசை புரோமொ வீடியோ இதோ...