எத்துன வில்லத்தனம்....ஒரு பிரச்சனையில் இருந்து தப்பித்து பெரிய சிக்கலில் சிக்கும் ரோஹினி! சிறகடிக்க ஆசை புரோமொ வீடியோ இதோ...



siragadikka-aasai-serial-today-episode-promo

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய முக்கியமான நிகழ்வுகள்

விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கும் விஜய் டிவி  சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று ஒரு திருப்புமுனை எபிசோட் வெளிவந்துள்ளது.

முத்துவின் கார் தவறுதலாக டிராபிக் போலீஸ் வண்டி மீது மோதி, அது பெரிய பிரச்சனையை உருவாக்குகிறது. போலீஸ் இன்ஸ்பெக்டர் உண்மையை மறைத்து முத்துவை கைது செய்ய திட்டமிடுகிறார். ஆனால், மீனா தனது புத்திசாலித்தனத்தால் இந்த சதி முயற்சியை தோல்வியடையச் செய்கிறாள்.

முத்து வீடு திரும்பும் தருணம்

இந்த பரபரப்புக்குப் பிறகு, முத்து வீட்டிற்கு திரும்புகிறார். அவர் தனது குடும்பத்தினருக்கு நடந்ததை சொல்லும்போது, ஒரு முக்கியமான விவாதம் எழுகிறது. பிரேக் கட் செய்ய சாவி அவசியம் என்பதால், சாவி வீட்டிலிருந்தே எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். இதனால், வீட்டில் உள்ள அனைவரும் சந்தேகத்திற்கு உட்படுகிறார்கள்.

இதையும் படிங்க: இப்படி பன்றீங்களே..! இதெல்லாம் உங்க கோபிக்கு தெரியுமா? பாக்கியலட்சுமி ராதிகாவை கலாய்கும் நெட்டிசன்கள்..!!

நாளைய எபிசோட் புரோமோ

சாவி தொலைந்தது குறித்து வீட்டில் பரபரப்பான சூழல் உருவாகிறது. முத்துவுக்கு ரோஹினி மீது சந்தேகம் அதிகமாகிறது. இதற்கிடையில், ரோஹினி மேலும் ஒரு சிக்கலில் சிக்குகிறார்.

சிட்டியிடம் பணம் கொடுத்து நகையை வாங்கி, விஜயாவிடம் கொடுக்கிறார். ஆனால், இது மற்றொரு புதிய பிரச்சனையை உருவாக்கும் நிலைக்குப் போகிறது. இதன் விளைவுகள் நாளைய எபிசோடில் தெரியும்.

இதையும் படிங்க: சித்திரவதை செய்த மாமியார்! மகளை வாழாவெட்டி ஆக்குனா அம்மா! இணையத்தில் ரவிமோகன் மாமியார் வெளிவிட்ட அறிக்கை இதோ....