அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
காதலர் தினத்தை தனது கணவருடன் அசத்தலாக கொண்டாடிய ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யா! வைரலாகும் புகைப்படம்.
காதலர் தினத்தை தனது கணவருடன் அசத்தலாக கொண்டாடிய ஆயுத எழுத்து சீரியல் நடிகை சரண்யா! வைரலாகும் புகைப்படம்.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சரண்யா. அந்த சீரியலில் நடித்து ஒட்டு மொத்த இளைஞர்களையும் கவர்ந்தவர்.
அதனை தொடர்ந்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் என்ற சீரியலில் நடித்து வந்தார். ஆனால் ரன் சீரியலிருந்து பாதியிலேயே விலகி தற்போது ஆய்த எழுத்து என்ற சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் கல்லூரியில் படிக்கும் போதே இலங்கை தமிழரான அமுதன் என்பவரை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார். கணவர் லண்டனில் வாழ்ந்து வரும் நிலையில் இவர் தொடர்ந்து சீரியலில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது காதல் கணவருடன் காதலர் தினத்தை அசத்தலாக கொண்டாடியுள்ளார். தற்போது அப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.