தலைவா நீங்கள் அரசியலுக்கு வந்தே ஆகவேண்டும்.! போராட்டத்தில் குதித்த ரஜினி ரசிகர்கள்.!

தலைவா நீங்கள் அரசியலுக்கு வந்தே ஆகவேண்டும்.! போராட்டத்தில் குதித்த ரஜினி ரசிகர்கள்.!


rajini fans protest in chennai

நடிகர் ரஜினிகாந்த் 2021 அரசியல் கட்சியை துவங்குவதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இதற்கிடையில் அவருக்கு ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ரஜினி ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடல்நிலை சீரானதை தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 
 
இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் மற்றும் பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், தனது  உடல் நலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக நடிகர் ரஜினி தான் அரசியல் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.  இதனால் ரஜினி ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். 

rajini

ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என வலியுறுத்தி, சென்னை - வள்ளுவர் கோட்டம் அருகே அறப் போராட்டத்தில் ஈடுபடுவதென அவரது ரசிகர்கள் முடிவெடுத்தனர். இந்தநிலையில் இன்று அனைத்து ரசிகர்களும் ஒன்று திரண்டு ரஜினியை அரசியலுக்கு அழைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கு ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களும், மாநில தலைமையும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் ரஜினி ரசிகர்கள் அதனை பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி இன்று  நுங்கம்பாக்கத்தில் ஒன்றுகூடுவதற்கு முடிவு செய்தனர். மேலும் இந்த அறவழி ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அங்கு நடக்கும் அறவழி போராட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.