கணேசா...!! உனது குடும்பத்திற்கு நான் உதவுகிறேன். உயிரிழந்த நடிகர் குடும்பத்துக்கு உதவ முன்வந்த பிரபல நடிகர்..

கணேசா...!! உனது குடும்பத்திற்கு நான் உதவுகிறேன். உயிரிழந்த நடிகர் குடும்பத்துக்கு உதவ முன்வந்த பிரபல நடிகர்..


ragava-lawarance-ready-to-actor-theepeti-ganesan-family

மறைந்த நடிகர் தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளுக்கு தான் உதவி செய்வதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

ரேனிகுண்டா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார் நடிகர் தீப்பெட்டி கணேசன். அந்த படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவ காற்று படத்திலும், அஜித்தின் பில்லா 2 , விஷ்ணு விஷாலின் நீர்ப்பறவை,  நயன்தாராவின் கோலமாவு கோகிலா என அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார் தீப்பெட்டி கணேசன்.

தொடர்ந்து படங்களில் நடித்துவந்த இவர் கடைசியாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கண்ணே கலைமானே படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கின்போது படவாய்ப்புகள் இல்லாமல், தான் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படுவதாகவும், தனது உடல்நிலை சரியில்லை எனவும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் தீப்பெட்டி கணேசன்.

அப்போது நடிகர்கள் சிலர் அவருக்கு உதவி செய்வதாக அறிவித்தனர். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தீப்பெட்டி கனேசன் அவர்கள் மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தநிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு சீனுராமசாமி உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

இந்நிலையில் தீப்பெட்டி கணேசனின் குழந்தைகளின் படிப்பு செலவை தான் ஏற்றுக்கொள்வதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுல பதிவில், "நடிகர் தீப்பெட்டி கணேசன் இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இவ்வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொன்று செய்தேன். இனிவரும் காலத்திலும் என்னால் இயன்றவரையிலான உதவிகளை அவரின் குழந்தைகளுக்குச் செய்வேன். கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.