கே.ஜி.எப் 2ம் பாகத்திலேயே சலார் அப்டேட் கூறிய பிரசாந்த் நீல்; ஜூம் செய்து கண்டுபிடித்த ரசிகர்கள்.!

கே.ஜி.எப் 2ம் பாகத்திலேயே சலார் அப்டேட் கூறிய பிரசாந்த் நீல்; ஜூம் செய்து கண்டுபிடித்த ரசிகர்கள்.!



Prashanth Neel Salaar Movie Update 

 

பிரஷாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் 2 பாகமாக வெளியாகி இந்திய அளவில் ஹிட் அடித்த திரைப்படம் கே.ஜி.எப். இந்த படத்தின் மூன்றாவது பாகம் விரைவில் எடுக்கப்பட்டு வெளியிடப்படும். 

இந்த நிலையில், தற்போது பிரஷாந்த் நீல் நடிகர் பிரபாஸுடன் இணைந்து சலார் என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. படத்தின் முதல் டீசர் ஜூலை 06ம் தேதி அதிகாலை 05:12 மணியளவில் வெளியாகிறது. 

இதற்கிடையில், ரசிகர்கள் ஒரு தகவலை கண்டறிந்துள்ளனர். கே.ஜி.எப் படத்தின் 2ம் பாக இறுதி காட்சிகளில் நாயகன் யாஷ் கப்பலில் இருந்து தகவல் கொடுத்தது 5 மணியளவில் என்பது அக்காட்சியை உற்றுநோக்கி பார்த்தால் தெரியும். 

kgf

பின்னர் அவர் கப்பலில் இருந்து வெளியே வந்து, அரசு அதிகாரிகளிடம் எவ்வித பதிலையும் தெரிவிக்காததால் அவரின் கப்பல் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்படும். 

இந்த நிலையில், அதே நேரத்தில் சலார் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், இரண்டிற்கும் தொடர்பு இருப்பதாக ரசிகர்கள் அறிய தகவலை கண்டறிந்து இருக்கின்றனர். 

லோகேஷ் கனகராஜின் கைதி மற்றும் விக்ரம் திரைப்படங்கள் இவ்வாறான பிணைப்பில் இருந்தது குறிப்பிடத்தக்கது.