உங்களுக்கு இருக்கு.! அத்துமீறி ஆரியிடம் எகிறிய பாலா! குறும்படம் போட்டு சும்மா கழுவி ஊற்றும் ரசிகர்கள்!

உங்களுக்கு இருக்கு.! அத்துமீறி ஆரியிடம் எகிறிய பாலா! குறும்படம் போட்டு சும்மா கழுவி ஊற்றும் ரசிகர்கள்!


netisans-kurumpadam-about-aari-and-bala-problem

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 , 85 நாட்களை கடந்து நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா,சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா மற்றும் கடந்தவாரம் அனிதா சம்பத் ஆகியோர் வெளியேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சி இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடையவுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நாளுக்கு நாள் சண்டைகள், மோதல், வாக்குவாதங்கள் என சூடு பறக்க சென்று கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஆரி மற்றும் பாலா இருவரும் ஓய்வறையில் இருந்தபோது இருவருக்கும் வாக்குவாதம் அதிகரித்தது. பாலாவை பார்த்து ஆரி சோம்பேறிதனம் என கூறியதும் அவர் பொங்கியெழுந்து ஆரியை மோசமாக திட்டித்தீர்த்து மைக்கையும் கழட்டி உடைத்துள்ளார்.

அப்பொழுது ஆரி அமைதியாக தான் கூறியதை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன், மன்னித்து விடுங்கள் என கூறியுள்ளார். ஆனால் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவும், பாலா சோம்பேறி என சொன்னதுக்கு ஒழுங்கு மரியாதையா மன்னிப்பு கேட்ருங்க, இல்லனா வேற மாதிரி ஆகிடும் என கடுமையாக பேசியுள்ளார்.

அதற்கு ஆரி, நான் ஓய்வறையில் மன்னிப்பு கேக்கலையா என்று கேட்டதற்கு, நீங்க வாபஸ் வாங்கிக்கிறேன்னு தான் சொன்னீங்க மன்னிப்பு கேட்கல என்று அடித்து கூறியுள்ளார். இந்நிலையில் ஆரி ரசிகர்கள் ஆரி, மன்னிப்பு கேட்டதற்கான குறும்படம் ஒன்றை வெளியிட்டு வைரலாகி வருகின்றனர்.