"வேண்டா வெறுப்பாக அந்த ஹிட் படத்தில் நடித்த ரஜினி! விருதுகளைக் குவித்த திரைப்படம்!"

தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ரஜினிகாந்த். இவரை ரசிகர்கள் தலைவர் என்றும், சூப்பர் ஸ்டார் என்றும் அன்புடன் அழைத்து வருகின்றனர். ஆரம்பத்தில் வில்லனாக அறிமுகமான இவர், தனது ஸ்டைலான நடை, உடை, பாவனைகளால் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் 1979ம் ஆண்டு பஞ்சு அருணாச்சலம் கதை எழுதி தயாரிக்க, எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் ரஜினி, சோ, சுருளி ராஜன், படாபட் ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படம் "ஆறில் இருந்து அறுபது வரை". இப்படிப்பட்ட ரஜினி கஷ்டப்பட்டு தன் தம்பி, தங்கைகளை படிக்க வைப்பார்.
மேலும் அவர்களுக்கு வேலையும் அமைத்துக்கொடுத்து தான் நடுத்தெருவுக்கு வந்துவிடுவார். ஆனால் அவரது தம்பி, தங்கைகள் எல்லாம் நன்றாக வாழும்போது ரஜினியை கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். இந்நிலையில் இப்படத்தில் ரஜினி நடிக்கும்போது நிஜத்தில் இப்படியெல்லாம் இருக்காதே என்று கூறினாராம்.
இதை தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்திடமும் ரஜினி கூறியுள்ளார்.இதையடுத்து வேண்டா வெறுப்பாகத்தான் ரஜினி இப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் இப்படம் தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை ரஜினிக்குப் பெற்றுத் தந்தது. மேலும் ரஜினியின் சிறந்த படங்களுள் ஒன்றாக இன்றுவரை உள்ளது.