"நயன்தாராவயா சொன்னாரு...?", "யாரையும் கட்டாயப்படுத்த முடியாது"- பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு விஷால் நச் பதில்.!



its-nayanthara-choice-and-no-one-can-force-her-vishal-a

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை போன்ற அடுத்தடுத்து திரைப்படங்களின் வெற்றியால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர்.

தற்போது இவரும் எஸ் ஜே சூர்யாவும் இணைந்து நடித்த  மார்க் ஆண்டனி என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கிறது. மேலும் இஸ்கினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துப்பறிவாளன் 2 திரைப்படத்தினை இவர் நடித்த இவரை இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

tamil cinema இந்நிலையில் நடிகர் மற்றும் நடிகைகள் அவர்கள் நடித்த திரைப்படங்களின் ப்ரோமோஷனில் கலந்து கொள்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்திருக்கிறார் விஷால். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில் இதனை தெரிவித்தார்.

tamil cinemaசமீபகாலமாகவே நயன்தாரா அவர் நடித்த திரைப்படங்களின் ப்ரொமோஷனில் பங்கேற்பதில்லை என்ற ஒரு சர்ச்சை நிலவி வருகிறது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்து இருக்கும் விஷால்  திரைப்படங்களின் ப்ரோமோஷனில் அதில் நடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொள்வது நன்றாக இருக்கும். ஆனால் அது குறித்து யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் என தெரிவித்து இருக்கிறார்.