கல்யாணம் செய்துகொள்ளமாட்டேன்-சாய்பல்லவி கூறிய அதிர்ச்சி தகவல் !

கல்யாணம் செய்துகொள்ளமாட்டேன்-சாய்பல்லவி கூறிய அதிர்ச்சி தகவல் !



i am not married to anyone -saipallvi

பிரேமம் படத்தின் மூலம் தென்னக மொழி ரசிகர்களிடம் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் சாய் பல்லவி.

தமிழில் இவர் நடித்த தியா, மாரி 2 போன்ற படங்கள் தோல்வியடைந்தாலும் இவருக்கு இன்றும் தமிழகத்தில் ஒரு கிரேஸ் உண்டு.

அதே போல் தெலுங்கில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அங்கும் இவரை ஒரு முன்னணி நடிகையாகவே பார்க்கிறார்கள்.

saipallavi

அந்தவகையில் அடுத்ததாக இவர் Virata Parvam 1992 என்ற தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார்.

ரானா  ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாகவும், பிரியாமணி, தபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கவுள்ளனர்.

இப்படி நட்சத்திரங்கள் பலரும் ஒரே படத்தில் இணைவதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் திருமணம் பற்றி பேசியுள்ள அவர் எப்போதும் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என கூறியுள்ளார். காரணம் கல்யாணம் செய்துகொண்டால் பெற்றோரை பார்த்துக்கொள்ள முடியாது. அதனால் திருமணம் செய்யமாட்டேன் என அவர் கூறியுள்ளார்.

இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.