பிரபல நடிகையின் அந்தரங்க புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்ட கணவர்.!

பிரபல நடிகையின் அந்தரங்க புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்ட கணவர்.!



fames tamil and malayalam actors priyanka

தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் தனது கணவர் வெளியிட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார் நடிகை பிரியங்கா.

தமிழ் திரையுலகிற்கு வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா. இந்த படம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்ற நிலையில் தொ( ல் )லைபேசி, செங்காத்து பூமியிலே, தீயோர்க்கு அஞ்சேல் போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார்.

அதன் பிறகு மலையாள திரையுலகில் தனது கவனத்தை செலுத்திய அவர் 2012ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் லாரன்ஸ் ராம் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு சென்னையில் குடியேறினார்கள் குழந்தைப் பேற்றிற்காக 2013ஆம் ஆண்டு கேரளா சென்ற  பிரியங்கா அதன்பிறகு சென்னை திரும்பவில்லை.

priyanka

இந்நிலையில், கடந்த 2015 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி, பிரியங்கா மனு தாக்கல் செய்தார். கணவருக்கு எதிராக, தனது சமூக வலைத்தள பக்கங்களை தவறாகப் பயன்படுத்தியது உட்பட 4 வழக்குகளைப் பதிவு செய்தார்.

priyanka

இதையடுத்து மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள பிரியங்கா, தனது கணவரை பிரிந்தது ஏன் என்பது பற்றி விளக்கமளித்துள்ளார். அதில், 'லாரன்ஸ், தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டார். அதோடு, சினிமாவில் மீண்டும் நடிக்க தனக்கு  தடை விதித்தார்' அதனால் அவரை விட்டு பிரிந்தேன். எனக்கு நடிப்பு மட்டும்தான் தெரியும். அதனால் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். நல்ல கேரடக்டர்கள் கிடைத்தால் நடிப்பேன்' என்றார். தனது கணவர் குறித்து பிரியங்கா வெளியிட்டுள்ள தகவல் கேரள  திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.