சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கண் கலங்கிய டி.டி.! ஏன் தெரியுமா.?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கண் கலங்கிய டி.டி.! ஏன் தெரியுமா.?



Divyadharshiniemoshnalsupersinger

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளராக வலம் வரும் டி.டி என்கின்ற திவ்ய தர்ஷினிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். முதலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த திவ்யதர்ஷினி, தற்போது பல்வேறு தனியார் நிறுவனங்களில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். திரைப்பட விருது வழங்கும் விழா மற்றும் பல்வேறு சின்னத்திரை விழாக்களிலும் அவர் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vijaytv

மேலும் திவ்யதர்ஷினி காலில் ஒரு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார் என்பதால், அவரால் வெகு நேரம் நிற்க முடியாது. ஆகவே அமர்ந்து கொண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதத்தில் அவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதோடு இவர் விஜய் தொலைக்காட்சியில் பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். மேலும் பிரபல யூட்யூப் சேனல் ஒன்றிலும் பணிபுரிந்து வருகிறார்.

Vijaytv

இந்த சூழ்நிலையில் தான், நேற்றைய தினம் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினி கண்ணீர் விட்டு அழும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, சூப்பர் சிங்கர் மேடையில்  பாடகர் பிரதீப் 'தலைக்கோதும் இளங்காத்து சேதிக் கொண்டுவரும்'என்ற பாடலை பாடினார். அதைக் கேட்டவுடன் திவ்யதர்ஷினி கண்ணீர் விட்டு அழுதார். அது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.