பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த இரண்டு இளம் பெண்கள்! கட்டிப்பிடித்து மகிழ்ச்சியில் சக போட்டியாளர்கள்.
பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. எழுபது நாட்களை கடந்துவிட்ட பிக்பாஸ் சீசன் 3 இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.
கவின், சாண்டி, சேரன், ஷெரின், தர்ஷண், வனிதா, முகென், லாஸ்லியா ஆகிய 8 பிரபலங்கள் விளையாடி வருகின்றனர். இதில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வைல்ட்கார்ட் என்ட்ரி மூலம் யாரவது வருவார்களா என எதிர்பார்த்த நிலையில் கிராமத்து பெண் போல் அழகாக தாவணி அணிந்தும், நகரத்து பெண் போல அபிராமியும் வந்திருக்கிறார்கள்.
மேலும் இவர்களுடன் மோகன் வைத்யாவும் வந்திருக்கிறார். இதனால் இன்ப அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறார்கள் உள்ளிருக்கும் போட்டியாளர்கள். அவர் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் வீடியோ இதோ.
#Day72 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/k0z0GFBBlg
— Vijay Television (@vijaytelevision) September 3, 2019