ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ரவுண்டு கட்டி செய்த காரியம்! செம கடுப்பில் ஷிவானி! சூடுபறக்கும் பிக்பாஸ் வீடு!

ஒட்டுமொத்த போட்டியாளர்களும் ரவுண்டு கட்டி செய்த காரியம்! செம கடுப்பில் ஷிவானி! சூடுபறக்கும் பிக்பாஸ் வீடு!



bigboss-today-promo-video-viral

விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 73 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகிய 6 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். மேலும்  கடந்த வாரம் டபுள் எவிக்சனில் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். 

இந்நிலையில் இந்த வாரம் துவக்கத்திலேயே ஓபன் நாமினேஷன் நடைபெற்று ஆரி, ரியோ, அர்ச்சனா, ஷிவானி, ஆஜித், அனிதா, சோம் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரு நாட்களாக கோழிப்பண்ணை டாஸ்க் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தங்க முட்டை கொடுக்கப்பட்டது. இதனை நரிகளாக இருக்கும் போட்டியாளர்களிடமிருந்து அவர்கள் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இந்த டாஸ்க்கால் வாக்குவாதங்கள், சண்டைகள் என பிக்பாஸ் வீடே ஆக்ரோஷமாக இருந்தது.

இந்நிலையில் இன்றைய நாளிற்கான ப்ரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் பிக்பாஸ் இந்த வாரம் போட்டியில் சுவாரஸ்யமும், ஈடுபாடும் குறைந்தவர்களை தேர்வு செய்ய கூறியநிலையில் அதிக போட்டியாளர்கள் ஷிவானியையும், கேப்ரில்லாவையும் தேர்வு செய்துள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த ஷிவானி நாமினேஷன் ஓகே, ஆனால் குற்றம் சுமத்துவது பிடிக்கவில்லை என கோபமாக கூறுகிறார். பின்னர் அவர்கள் இருவரும் ஓய்வெடுக்கும் அறைக்கு அனுப்பப்படுகின்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.