கமல்ஹாசனிடம் சாண்டி செய்த செயல்! கடுப்பில் பிக்பாஸ் கூறிய பதில் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.

கடந்த 105 நாட்களாக நடந்த பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த ஞாயிறுடன் முடிவுக்கு வந்தது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், லாஷ்லியா, ஷெரின் மற்றும் சாண்டி மாஸ்டர் ஆகிய நால்வர் மட்டும் இறுதி வாரத்திற்கு தேர்வாகினர்.
இதில் அதிக வாக்குகளை பெற்று முகேன் ராவ் சீசன் மூன்று பிக்பாஸ் பட்டத்தை கைப்பற்றியதோடு 50 லட்சம் பரிசு தொகையையும் வென்றார். இரண்டாம் இடத்தை சாண்டி மாஸ்டர் கைப்பற்றினர். மூன்று மற்றும் நான்காம் இடத்தை லாஷ்லியா மற்றும் ஷெரின் கைப்பற்றினர்.
இந்நிலையில் இறுதி நாளின் போது நடிகர் கமல் வீட்டிற்கு உள்ளே வந்து போட்டியாளர்கள்டன் உறையாடி சென்றார். அதன் பிறகு வீட்டை விட்டு செல்லும் போது சாண்டி சார் நானும் உங்களுடன் வெளியே வருகிறேன் எனக்கு ஆசையாக இருக்கு என கூறி கமலை தொந்தரவு செய்கிறார்.
உடனே கடுப்பான பிக்பாஸ் சாண்டியிடம் அப்படி எல்லாம் வெளியே செல்ல முடியாது என கூறுகிறார். அவர் கூறியது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் முகேன் அவர்களை சமாதானம் செய்து உள்ளே அழைத்து செல்கிறார்.