நாங்களும் போட்டுட்டோம்.. தனது மகனுடன் சேர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் செய்த காரியம்! வைரலாகும் செல்பி!!
நாங்களும் போட்டுட்டோம்.. தனது மகனுடன் சேர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் செய்த காரியம்! வைரலாகும் செல்பி!!
நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2ஆம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
மேலும் பலருக்கும் இன்று வரை தடுப்பூசி குறித்த அச்சம் உள்ளது. தடுப்பூசி போட பெரிதும் யோசிக்கின்றனர். இந்நிலையில் அதனை போக்கும்வகையில், விழிப்புணர்வை ஏற்படுத்த அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும், அவரது மகன் ஏ.ஆர்.அமீனும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸை போட்டுக்கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் தனது மகனுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அது வைரலாகி வருகிறது.