“அசுரன்” கதையின் முதல் சாய்ஸ் கருணாஸா? – வெற்றிமாறன் சொன்ன அந்தக் கதை!
இனி வேற வழியில்லை... எடப்பாடி காலில் விழவேண்டிய நிலைதானா? இன்று நடக்கும் ரகசிய பேச்சுவார்த்தை.... அடுத்தக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்.!!!
அதிமுகவில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த உட்கட்சி மோதல் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் கொடுத்த எஸ்.பி.வேலுமணி தரப்பு, தற்போது மீண்டும் சமரச பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
தவெக ஆட்சியில் தங்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சில அதிமுக நிர்வாகிகள், கடந்த தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி தனது பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். இதனால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அழியப்போகும் அதிமுக கட்சி...? எடப்பாடியை ஓரங்கட்டும் மாஜிக்கள்! சிவி சண்முகம் செய்யும் தில்லாங்கடி வேலையால்.... தலையை ஆட்டும் அமைச்சர்கள்!
வேலுமணி தரப்பின் திடீர் அழுத்தம்
குறிப்பாக எஸ்.பி.வேலுமணி ஆதரவாளர்கள், கட்சித் தலைமையில் மாற்றம் தேவை என்ற கோரிக்கையை முன்வைத்து தீவிரமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் இரண்டு அணிகள் உருவானது போன்ற சூழல் நிலவியது.
அதன்பின், தவெக அமைச்சரவையில் அதிமுகவினருக்கு இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அது நடைமுறைக்கு வரவில்லை எனத் தகவல்கள் வெளியாகின. இதுவே வேலுமணி தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
மீண்டும் இணையும் முயற்சி?
இதையடுத்து, அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மீண்டும் இபிஎஸ் தரப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற முடிவுக்கு வேலுமணி ஆதரவாளர்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இன்று முக்கிய சமாதான பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பேச்சுவார்த்தையில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள், நிர்வாக மாற்றங்கள் மற்றும் எதிர்க்கட்சித் தளத்தை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக அரசியலில் அடுத்த கட்ட பரபரப்பு
தற்போதைய சூழலில் அதிமுக மீண்டும் ஒருங்கிணைந்த அணியாக செயல்படுமா அல்லது உட்கட்சி மோதல் மேலும் தீவிரமாவதா என்பது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. வரவிருக்கும் நாட்களில் எடுக்கப்படும் முடிவுகள் கட்சியின் அடுத்தகட்ட அரசியல் பாதையை தீர்மானிக்கும் என பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுக விற்கு இந்த நிலைமையா? எடப்பாடியை தலைமை பொறுப்பிலிருந்து மாற்றம்.... ஷாக் தகவல்!!!