பஹல்காம் தாக்குதல் குறித்து நடிகை காஜல் அகர்வால் என்ன சொல்லிருக்கார் பாருங்க.

திரையுலகில் தனது அழகும் திறமையும் வெளிப்படுத்தி பலரின் மனதையும் கவர்ந்தவர் நடிகை காஜல் அகர்வால். ஹிந்தி சினிமாவில் 'க்யூன் ஹோ கயானா' என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்கில் 2007-ம் ஆண்டு வெளியான லக்ஷ்மி கல்யாணம் படம் மூலம் நாயகியாக பரிச்சயமானார்.
தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளியான 'பழனி' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு, விஜய்-யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல், அஜித்-யுடன் விவேகம், கார்த்தி, சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.
2020-ம் ஆண்டு தொழிலதிபர் கௌதம் கிச்லுவை திருமணம் செய்துகொண்ட காஜலுக்கு, இப்போது நீல் என்ற மகன் இருக்கிறார். குடும்ப வாழ்க்கையையும், தனது திரை வாழ்க்கையையும் சமநிலையாக கையாள்கிறார். இந்நிலையில், சமீபத்தில் பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில், காஜல் சமூக வலைதளத்தில் தனது மனம் நெகிழவைக்கும் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
"பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் இந்து - முஸ்லீம் இடையேயான பிரச்சனை அல்ல. ஆனால் அதைத் தவறாக மாற்ற விரும்புபவர்கள் உள்ளார்கள். ஒரு பெயரின் அடிப்படையில் யாரையும் பிரிக்க வேண்டாம்.
பிரிவினை என்பது பயத்தையும், எதிர்ப்பையும் மட்டுமே உருவாக்கும். நாம் எல்லோரும் ஒரே இனம் என்பதைக் கண்ணிலும் மனதிலும் வைத்துக்கொள்ள வேண்டும்," எனக் கூறியுள்ளார் காஜல்.
இன்றைய காலத்தில் பிரிவினையைத் தூண்டும் கருத்துகள் அதிகரித்து வரும் நிலையில், காஜல் அளித்த இந்த கருத்து சமூக நலனுக்கான ஒரு விழிப்புணர்வு முயற்சி எனும் வகையில் பாராட்டதக்கது.
நீங்கள் காஜல் பகிர்ந்த இந்த கருத்துகளோடு ஒத்துப் போகிறீர்களா?
இதையும் படிங்க: சூப்பர் சிங்கரில் தொகுப்பாளினி பிரியங்கா இல்லை.! அவருக்கு பதில் களமிறங்கிய பிரபல சீரியல் நடிகை.! யார்னு பார்த்தீங்களா!