நெல்லையில் மக்களை நேரில் சந்தித்த தளபதி விஜய்.. மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்.!!

நெல்லையில் மக்களை நேரில் சந்தித்த தளபதி விஜய்.. மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் ரசிகர்கள்.!!



Actor vijay flood relief materials nellai

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் இந்த ஆண்டு வரலாறு காணாத மழை காரணமாக பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 17-ம் தேதிக்கு மேல் திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கடும் மழை மற்றும் வெள்ளத்தை எதிர்கொண்டன.

இதனால் பல வீடுகள், சாலைகள் முழுவதும் வெள்ளநீரால் சூழப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துபோனது. ஆயிரக்கணக்கான கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை செய்து வருகிறது.

cinema news

இந்த நிலையில் திருநெல்வேலியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஜய் கே.டி.சி நகரில் நடைபெறும் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார்.

தற்போது அவர் நெல்லையில் இருக்கும் நிலையில், அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. அவரைக்கண்ட ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.