குழந்தை போன்றவர்!! பிரபல நடிகர் ஜோக்கர் துளசி மறைவுக்கு நடிகை ராதிகா இரங்கல்!!

குழந்தை போன்றவர்!! பிரபல நடிகர் ஜோக்கர் துளசி மறைவுக்கு நடிகை ராதிகா இரங்கல்!!



actor-jokker-thulasi-passed-away

பிரபல நாடக நடிகர் துளசி கொரோனா பாதிப்பால் உயிரிழந்த தகவல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பால் அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் தொடங்கி பொதுமக்கள்வரை அன்றாடம் பலபேர் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதில் பெரும்பாலான மரணங்களும் ஏற்பட்டுவருகிறது. சமீபத்தில் கூட பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் மரணமடைந்தார்.

இந்நிலையில் பிரபல நாடக நடிகர் ஜோக்கர் துளசி அவர்கள் கொரோனா பாதிப்பால் மரணமடைந்துள்ளார். தற்போது 71 வயதாகும் ஜோக்கர் துளசி அவர்கள், 1976ஆம் ஆண்டு தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளியான 'உங்களில் ஒருத்தி'என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மன்மத லீலை, மருதுபாண்டி, திருமதி பழனிசாமி, புதுமைப்பித்தன் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் உட்பட பிறமொழி படங்களிலும் நடித்துள்ளார்.

சீரியலிலும் கலக்கிவந்த இவர், கோலங்கள், வாணிராணி, கஸ்தூரி, அழகு உட்பட பல தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர். 
நடிகர் ஜோக்கர் துளசி மறைவுக்கு நடிகை ராதிகா தனது இரங்கலை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.