பத்ம பூஷன் விருதை பெற்ற அஜித் மனைவியை பற்றி பெருமையாக கூறிய விஷயங்கள்! இணையத்தில் வைரலாகும் பேட்டி!



actor-ajith-kumar-credits-wife-salini-for-padma-bhushan

இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான திரு. அஜித் குமார், கலைத்துறையில் அளித்த சிறப்பான பங்களிப்புக்காக நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார். கடந்த திங்கட்கிழமை, டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் இந்த விருது வழங்கப்பட்டது.

அஜித், விழாவில் கோர்ட் சூட்டில் அழகாக திகழ்ந்தார். அவரது பெயர் அறிவிக்கப்பட்டவுடன், நேரில் எழுந்து நின்று பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த பிறகு, அவர் விருதை பெற்றுக்கொண்டார். அந்த நிமிடம், அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் உற்சாகமாக கைதட்டி கொண்டாடிய காட்சி அனைவரையும் கவர்ந்தது.

சென்னையில் வரவேற்பு

பத்ம பூஷன் விருதை பெற்ற பின், சென்னை திரும்பிய அஜித்துக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். செய்தியாளர்களை சந்தித்த அவர், “விரைவில் சந்திக்கிறேன்” என எளிமையாக கூறிவிட்டு சென்றார்.

இதையும் படிங்க: "கோழைகளே... கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.." ஜிபியு விமர்சனம்.!! நடிகை திரிஷா பதிலடி.!!

ஷாலினியைப் பற்றி கூறிய அஜித்

இந்தக் கொண்டாட்டங்களுக்கிடையில், ஒரு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தனது மனைவி ஷாலினியைப் பற்றியும் பேசினார். “திருமணத்திற்கு முன் ஷாலினி மிகவும் பிரபலமான நடிகை. ரசிகர்கள் அவரை நேசித்தார்கள். ஆனால் திருமணத்திற்குப் பிறகு, எனக்காக தனது நடிப்பை விட்டுவிட்டு குடும்பத்தில் முழுமையாக கவனம் செலுத்தினார். அது சாதாரணமான தீர்மானமல்ல. பல சமயங்களில் நான் தவறு செய்தாலும், அவர் என் பக்கத்தில் நின்று உறுதுணையாக இருந்தார். எனக்கு வழங்கப்பட்ட விருதும் பாராட்டுக்களும் முழுமையாக அவருக்கே சேரும்,” என உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளார்.

ரசிகர்கள் பாராட்டு

அஜித் கூறிய இந்த வார்த்தைகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. “இப்படி ஒரு மனைவி கிடைக்க, அஜித் ஏதேனும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்” என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

 

 

இதையும் படிங்க: மூன்றாவதாக வந்த குட்டி தேவதை.! நடிகை ஸ்ரீ லீலா பகிர்ந்த கியூட் புகைப்படம்.! நெகிழ்ந்து பாராட்டிய ரசிகர்கள்!!