" நான் குடிகாரன்.. என் மனைவியால் தான் இந்த நிலைமையில் இருக்கிறேன் " நடிகர் முத்துக்காளையின் பரபரப்பு பேட்டி..

" நான் குடிகாரன்.. என் மனைவியால் தான் இந்த நிலைமையில் இருக்கிறேன் " நடிகர் முத்துக்காளையின் பரபரப்பு பேட்டி..



Acter muthukaalai interview

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடியனாக நடித்தவர் முத்துக்காளை. இவர் வடிவேலுவுடன் நடித்த சில திரைப்படங்களின் காமெடி காட்சிகளை மக்கள் ரசித்தனர். இவர் சில காலங்கள் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்தார்.

Acter

இவர் சமீபத்தில் கூறியதாவது, நான் ஒரு 3 வருடம் சினிமாவை விட்டு ஒதுங்கி, ஊரில் டைலர் கடை வைத்திருந்தேன். அந்த கடையில் எப்போதுமே ஒரு பத்து பேர் இருப்பார்கள். அதற்கு முன்பான காலம் எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது.

நான் குடிப்பதை விட்டு, ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டு சித்தன் போக்கு, சிவன் போக்கு என்று இருந்தேன். எனக்கெல்லாம் கல்யாணம் ஆகும் என்று கூட நினைக்கவில்லை.

Acter

திடீரென்று என் அக்கா மகள் என்னை திருமணம் செய்யக்கேட்டார். நான் நிறைய குடிப்பேன், நிலையில்லாத சினிமா வேலையில் நிலையான வருமானம் இல்லாமல் இருக்கிறேன் என்று எவ்வளவோ சொல்லியும், என் மனைவி எதையும் பொருட்படுத்தாமல் என்னை திருமணம் செய்துகொண்டார். என் மனைவியின் காதலினால் தான் இப்போது நல்ல நிலைமையில் இருக்கிறேன்" என்று கூறினார்