சரசரவென உயரும் முட்டை விலை; 50 ஆண்டுகளில் இல்லாத அளவு புதிய உச்சம்...!!
சரசரவென உயரும் முட்டை விலை; 50 ஆண்டுகளில் இல்லாத அளவு புதிய உச்சம்...!!
முட்டை விலை சாமானிய மக்கள் வாங்க யோசிக்கும் அளவுக்கு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம், முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையாக ரூ.5.55 காசுகளில் இருந்து 10 காசுகள் உயர்த்தி ரூ.5.65 ஆக விலை நிர்ணயம் செய்து, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு அறிவித்தது.
வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி செய்வது அதிகரித்துள்ளது. மேலும் வடமாநிலங்களில் குளிர் அதிகரித்துள்ளதால், அங்கு முட்டையின் நுகர்வும், விற்பனையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் மதுரை, தென்மாவட்டங்கள் மற்றும் சென்னையிலும், சில்லரை கடைகளில், முட்டை ஒன்று ரூ.6.50க்கு விற்கப்பட்டு வருகிறது.
முட்டையின் இந்த விலை உயர்வு, கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் முட்டை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.