பெற்றோர் கண்முன் மகளை மரத்தில் கட்டி வைத்து அடித்த ஊர்க்காரர்கள்; காரணம் என்ன..!!

பெற்றோர் கண்முன் மகளை மரத்தில் கட்டி வைத்து அடித்த ஊர்க்காரர்கள்; காரணம் என்ன..!!



girl beaten in front of parents

பீகார் மாநிலம் நவாடா மாவட்டம் ராஜூலி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை அந்த ஊர்க்காரர்கள் மரத்தில் கட்டிவைத்து 5 மணி நேரம் தொடர்ந்து அளித்துள்ளன இதனை அந்த பெண்ணின் பெற்றோர்களும் நேரில் பார்த்துக்கொண்டு இருந்துள்ளனர்.

இதற்கு காரணம் என்னவென்று விசாரித்தால் அந்த பெண் வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்த ஆணை காதலித்து திருமணம் செய்து கொண்டது தான் என்று ஊர்க்காரர்கள் கூறியுள்ளனர். 

ராஜூலி கிராமத்தைச் சேர்ந்த அந்த பெண் வேறு சாதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அந்த பெண், தனது காதலனுடன் சேர்ந்து ஊரை விட்டு ஓடிச் சென்று திருமணம் செய்துக் கொண்டர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராமத்தினர் அந்த பெண்ணை தேடி வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் பக்கத்தில் இருந்த வேறொரு கிராமத்தில் வசித்து வருவது கிராமத்தினருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து தகவலறிந்த ராஜூலி கிராமத்து பஞ்சாயத்தார் அந்த பெண் இருக்கும் இடத்தை தேடிச்சென்று அவரை அடித்து இழுத்து வந்துள்ளனர்.

பின்னர் பஞ்சாயத்து உத்தரவுப்படி, அந்த பெண்ணை மரத்தில் கட்டி வைத்து 5 மணிநேரம் விடாமல் அடித்துள்ளனர். பெண்ணின் பெற்றோர்களும் பஞ்சாயத்து கொடுத்த தீர்ப்பை ஆதாரித்து மகள் அடி வாங்குவதை வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை செய்தியாளர்களிடம் கூறுகையில், எனது மகள் தன்னுடைய விருப்பத்தை மீறி, வேறு சாதி ஆணுடன் திருமணம் செய்து கொண்டதை தான் விரும்பவில்லை என்று தெரிவித்தார். மேலும் பஞ்சாயத்து கொடுத்து தண்டனை சரிதான் என்றும் கூறினார்.

ஆனால் இதுகுறித்து தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என ராஜூலி பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.