அமெரிக்காவில் அதிக அளவு தண்ணீர் அருந்திய பெண் உயிரிழப்பு! மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சி தகவல்!!



women died due to too much water consumed

மெரிக்காவின் தென்மேற்கில் தற்போது வெப்ப நிலையானது மோசமான நிலையில் அதிகரித்து வருகிறது. மேலும் இந்த நிலை தொடர்ந்தால் அமெரிக்காவில் அதிக அளவு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இப்படியான சூழ்நிலையில், 35 வயது பெண் ஒருவர் 20 நிமிடத்திற்குள் 2 லிட்டர் தண்ணீரை குடித்துள்ளார். இதனால் அவர் சற்று நேரத்திலே மயக்கம் அடைந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது வீட்டார், அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு உடல்நிலை மோசமானதால் உயிரிழந்துள்ளார்.

உடலில் அதிக தண்ணீர் சத்து இருப்பினும் தேவையான அளவு சோடியம் குறைவாக இருந்தால் இம்மாதிரியான உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.