கணவர் இறந்த துக்கதில் அடுத்த நொடியே மயங்கி விழுந்து மனைவி! இறப்பிலும் இணைபிரியாத தம்பதியினர்! நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்...

ஈரோடு மாவட்டத்தின் பெரியநாயக்கன் பாளையத்தில் வசித்து வந்த 92 வயதான ராதாகிருஷ்ணன், வயது முதிர்வால் உயிரிழந்தார். அவரின் மனைவி சரோஜா (82), கணவரின் மரண செய்தியால் வேதனையுடன் அழுதபடியே மயங்கி விழுந்தார்.
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற உறவினர்கள், மருத்துவ பரிசோதனை செய்த போது, சரோஜா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
நெஞ்சை நெகிழ வைக்கும் இந்த சம்பவத்தில், எப்போதும் இணைபிரியாமல் வாழ்ந்த இந்த தம்பதியினர் ஒரே நாளில் உயிரிழந்தது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தையும் உணர்வுப் பூர்வமான மனநிலையையும் உருவாக்கியுள்ளது.
இதையும் படிங்க: தொட்டில் கயிறை வைத்து குழந்தைகளை சிரிக்க வைத்த தந்தை! கண்ணிமைக்கும் நொடியில் நடந்த அதிர்ச்சி! நடுங்க வைக்கும் சம்பவம்..
இதையும் படிங்க: மகிழ்ச்சி செய்தி! தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல்.. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!