இந்த கெஸ்ட்டை யாரும் எதிர்பார்கலையே...எனக்கு பசிக்குது! கடைக்குள் கட கடவென புகுந்து மிட்டாய், வாழைப்பழம், சாண்ட்விச் எடுத்து சாப்பிட்ட யானை! இறுதியில் என்ன பண்ணுதுன்னு பாருங்க... வைரலாகும் வீடியோ!!!
தாய்லாந்தில் உள்ள ஒரு சிறிய மளிகைக் கடையில் எதிர்பாராத விருந்தினராக காட்டு யானை ஒன்று நுழைந்தது. அங்கு இருந்த தின்பண்டங்களை சுவைத்துவிட்டு எந்த பரபரப்பும் இல்லாமல் அமைதியாக வெளியேறியது. இந்த காட்சி இணையத்தில் வேகமாக பரவி, பலரையும் ஆச்சரியத்துக்கும் சிரிப்புக்கும் ஆளாக்கியுள்ளது.
கடைக்குள் ‘வாடிக்கையாளர்’ போல வந்த யானை
அருகிலுள்ள தேசியப் பூங்காவிலிருந்து வழிதவறி வந்ததாக கூறப்படும் இந்த யானை, பழகியவரைப் போலவே கடைக்குள் நுழைந்தது. தும்பிக்கையைப் பயன்படுத்தி இனிப்பு அரிசி மிட்டாய், வாழைப்பழம், சாண்ட்விச் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டது. இந்த காட்டு யானை நடத்தை அங்கு இருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.
பயமின்றி பார்த்த மக்கள்… சேதமின்றி வெளியேறியது
கடையில் இருந்தவர்கள் ஓடிப்போகவில்லை. மாறாக, இந்த அபூர்வமான தருணத்தை அமைதியாகக் கவனித்தனர். சுமார் 25 டாலர் மதிப்புள்ள பொருட்களை சாப்பிட்டுவிட்டு, எதையும் சேதப்படுத்தாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. ‘சாந்தமான ராட்சதன்’ போல நடந்துகொண்ட இந்த நிகழ்வு தான் வீடியோவின் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.
வைரல் வீடியோவும் பின்னணி உண்மையும்
இந்த வைரல் வீடியோ பரவியதும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் குவிந்தன. “இன்சூரன்ஸுக்கு எப்படி சொல்வது?” போன்ற நகைச்சுவை கருத்துகள் வந்தாலும், இதற்குப் பின்னால் ஒரு உண்மை உள்ளது. வனப்பகுதிகள் குறைந்து வருவதால், உணவுக்காக விலங்குகள் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வனவிலங்கு அமைப்பு கடை உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Imagine explaining this to your insurance pic.twitter.com/TK5cISPi8e
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) April 25, 2026