BREAKING: இதுதான் இயற்கையின் பரிசு! காவேரி நீர் தமிழகத்திற்கு 10,000 கனஅடி நீர் பாய்கிறது.... சற்றுமுன் நிலைப்பாட்டை மாற்றிய கர்நாடக அரசு!!!



kabini-dam-water-release-karnataka-rain

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கபினி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து, இன்று மாலைக்குள் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி வரை தண்ணீர் திறந்துவிடப்படலாம் என்ற தகவல் வெளியாகி, காவிரி நீர் விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கனமழையால் நிரம்பிய கபினி அணை

தொடர்ச்சியான மழை காரணமாக கபினி அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்க அதிகாரிகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இடியுடன் இரவு முழுவதும் கொட்டிய மழை! இந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறையா...? வெளியாகும் அறிவிப்பு!

டி.கே. சிவக்குமார் விளக்கம்

பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார், “இயற்கை யாருக்கும் சொந்தமானது அல்ல. அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், நீர் திறப்புக்கு எதிரான போராட்டங்களை அனைவரும் கைவிட வேண்டும்” என்று தெரிவித்தார்.

நிலைப்பாட்டை மாற்றிய கர்நாடக அரசு

நேற்று வரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறி வந்த கர்நாடக அரசு, அணையின் நீர்மட்டம் உச்சத்தை எட்டியதைத் தொடர்ந்து தற்போது தண்ணீர் திறக்க முடிவு செய்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: வெயிலின் தாக்கத்தால் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!!