வார்த்தையே இல்ல... விலங்குகளிடம் இருக்கும் இந்த எண்ணம் எல்லாரிடமும் இருந்தால் வாழ்க்கையே மாறிடும்! தெருநாய் செய்த செயலை பாருங்க.... கண்கலங்க வைக்கும் வீடியோ!!!
சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. ஒரு தெருநாய் காட்டிய கருணை, மனிதர்களின் மனதைக் கவர்ந்ததுடன், இணையத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது தெளிவாக தெரியாதபோதிலும், அதில் பதிவான காட்சி பலரையும் உருக்கியுள்ளது.
பூனைக்குட்டிகளுக்கு உணவளித்த தெருநாய்
வீடியோவில், ஒரு கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த உணவை ஒரு தெருநாய் எடுத்து ஓடும் காட்சி காணப்படுகிறது. அதை பார்த்த ஒருவர், அந்த நாயை பின்தொடர்ந்து செல்வதும் பதிவாகியுள்ளது. ஆனால் சில நொடிகளில் நிகழ்ந்த மாற்றமே அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆச்சரியத்தில் நின்ற மனிதர்
நாய் எடுத்துச் சென்ற உணவை, அருகில் இருந்த இரண்டு பூனைக்குட்டிகளிடம் வைத்து அவற்றுக்கு உணவளிக்கிறது. இதை நேரில் பார்த்த அந்த நபர், சில நொடிகள் வார்த்தைகள் இல்லாமல் நின்று விடுகிறார். எதிர்பாராத இந்த செயல், விலங்குகளின் அக்கறையை வெளிப்படுத்தும் தருணமாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: பொறுமையை இழந்த கோழி! தொடர்ந்து கத்தி கொண்டே இருந்த காகம்! அடுத்த நொடி ஆக்ரோஷத்தில் கோழி செய்த செயலை பாருங்க... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
சமூக வலைதளங்களில் பரவும் பாராட்டு
இந்த viral video தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பலரும், “விலங்குகளிடம் இருக்கும் கருணை மனிதர்களிடமும் இருந்தால் உலகம் மாறியிருக்கும்” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக அந்த street dog காட்டிய அக்கறை, மனிதநேயத்தை மீண்டும் நினைவூட்டுவதாக பலர் பதிவிட்டுள்ளனர்.
Hayvanlarda ki merhametin zerresi insan da olsaydı
Yeryüzü zaten cennet olurdu pic.twitter.com/e08uYKS7GN— 𝑪𝐢𝐡𝐚𝐧 🐾 (@_cihhan__) April 28, 2026
இதையும் படிங்க: கூண்டுக்குள் நேருக்கு நேர் சிக்கிய இளம்பெண்! சாமர்த்தியமாகச் அந்த பெண் செய்த செயலை பாருங்க....வைரல் வீடியோ!!!