பகீர்... மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பாலியல் சீண்டல்... மேலாடை விவகாரம் தொடர்பாக அழகிகள் பரபரப்பு புகார்.!

பகீர்... மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பாலியல் சீண்டல்... மேலாடை விவகாரம் தொடர்பாக அழகிகள் பரபரப்பு புகார்.!



sexual-scandal-in-miss-universe-participants-register-c

இந்தோனேசியா நாட்டில் நடைபெற்ற முதலாவது மிஸ் யூனிவர்ஸ் இந்தோனேசியா போட்டியில் பாலியல் சீண்டல்கள் நடந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தோனேசியா தலைநகரான ஜகர்த்தாவில் உள்ள பீச் சிட்டி சர்வதேச மைதானத்தில் வைத்து மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியா அழகி போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகள் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரை  நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட அழகிகள் கலந்து கொண்டனர்.

worldஇந்தப் போட்டிகளில் மிஸ் யுனிவர்ஸ் இந்தோனேசியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான்  இந்தோனேசியா சார்பாக மிஸ் யுனிவர்ஸ்  போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மிஸ்  யூனிவர்ஸ் இந்தோனேசியா போட்டியில்  ஃபபியன் என்பவர் அழகி பட்டம் வென்றார்.

இந்நிலையில் இறுதி போட்டியில் கலந்து கொண்ட ஆறு அழகிகள் இந்தப் போட்டியின் போது உடல் பரிசோதனை என்ற பெயரில் தங்களுக்கு பாலியல் சீண்டல் ஏற்பட்டதாகவும் மேலும் தாங்கள்  மேலாடைகளை அகற்றியபோது புகைப்படங்கள் எடுத்ததாகவும் அப்போது ஆண்களும் பரிசோதனையில் இருந்ததாகவும் தங்களது வழக்கறிஞர்கள் மூலம் காவல்துறையில் புகார் அளித்திருக்கின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.