World News: விமானம் விழுந்து நொறுங்கி சோகம்.. 13 பேர் பரிதாப பலி.!
சுற்றுலா விமானம் விழுந்து நொறுங்கியதில் 13 பேர் உயிரிழந்தனர்.
சிறிய விமானம்:
பெரு நாட்டில் உள்ள நாஸ்கா பகுதியில் பயணிகள் சுற்றுலா விமானம் விழுந்து 11 பயணிகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் நாஸ்கா கோடுகளின் மீது சுற்றுலா பயணத்தை வழிநடத்தி வருகிறது. பெருவின் எரோடியானா நிறுவனம் இயக்கிய விமானம் வாடகை சேவையை வழங்கி வருகிறது.
இதையும் படிங்க: சிவகங்கை: அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து.. இரத்த வெள்ளத்தில் கதறிய பயணிகள்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.!
பிரபலம்:
பெருவின் நாஸ்கா கோடுகளின் புவிக்கோட்டு சித்திரம் மீது பயணம் மேற்கொள்ள பல சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் இருப்பார்கள் என்பதால் இது உள்ளூர் சுற்றுலாவாக மாறியது. இந்த விமானம் பிசுகோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நாஸ்காவில் இருந்து 6 கிமீ தொலைவில் பயணித்தபோது, விவசாய நிலையத்தில் விழுந்து நொறுங்கியது.

விசாரணை:
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் நிகழ்விடத்திற்கு நேரில் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மீட்பு பணியில் 13 பேரும் இறந்தது உறுதி செய்யப்பட்டது. மேற்படி விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: #Breaking News: சாத்தூரில் சோகம்.. பட்டாசு ஆலை வெடித்து 2 பேர் பலி.!