அதுவும் ஒரு உயிர் தானே..! தாகத்தால் தவித்த நாய்..! தனது கைகளால் முதியவர் செய்த காரியம்.! குவியும் பாராட்டு.!

அதுவும் ஒரு உயிர் தானே..! தாகத்தால் தவித்த நாய்..! தனது கைகளால் முதியவர் செய்த காரியம்.! குவியும் பாராட்டு.!


Old man helps to dog have water using his hand video goes viral

நாய் ஒன்றின் தாகத்தை போக்குவதற்காக முதியவர் ஒருவர் தனது கைகளால் தண்ணீர் பிடித்து அந்த நாய்க்கு கொடுக்கும் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இந்திய வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த காட்சி இடம்பெற்றுள்ளது.

அந்த பதிவில், தெருநாய் ஓன்று தண்ணீர் தாகத்துடன் தவித்துக்கொண்டு நின்றுள்ளது. அதனை பார்த்த வயதான முதியவர் ஒருவர், அருகில் உள்ள தண்ணீர் குழாயில் இருந்து தனது கைகளால் தண்ணீரை பிடித்து அந்த நாய்க்கு குடிக்க கொடுக்கிறார்.

சுமார் 19 வினாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பலமுறை தனது கைகளால் தண்ணீரை பிடித்துவந்தது அந்த நாய்க்கு குடிக்க கொடுக்கிறார் அந்த தாத்தா. பலன் ஏதும் எதிர்பாராமல், அந்த நாயையும் ஒரு உயிராக மதித்து அதன் தாகத்தை போக்கிய அந்த முதியவரை பலரும் பாராட்டிவருகின்றனர்.